நாங்க போட்ட ஓட்டு பிச்சையில்தான் தி.மு.க. வெற்றி பெற்றது.. ஸ்டாலினுக்கு சவால் விடும் பாதிரியார்.!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதில் சிறுபான்மையினராக விளங்கும், முஸ்லீம், கிறிஸ்டின் போட்ட ஓட்டு பிச்சையில்தான் வெற்றி பெற்றது என்று பாதிரியார் ஒருவர் வெளிப்படையாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவால் விடுகின்ற வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2021-07-22 06:27 GMT

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதில் சிறுபான்மையினராக விளங்கும், முஸ்லீம், கிறிஸ்டின் போட்ட ஓட்டு பிச்சையில்தான் வெற்றி பெற்றது என்று பாதிரியார் ஒருவர் வெளிப்படையாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவால் விடுகின்ற வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுபான்மையினர் ஓட்டு அதிகளவு இருக்கின்றது. இதனால் இந்துக்களை வேண்டும் என்றே திமுக தவறுதலாக பேசிகிறது. இந்துக்களை தவறுதலாக பேசினால்தான் கிறிஸ்துவர் மற்றும் முஸ்லீம்கள் திமுகவுக்கு ஓட்டு போடுகின்றனர் என்று அவர்கள் நம்புகின்றனர்.



இதனை கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லீம்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, வேண்டும் என்றே இந்துக்கள் மீது ஏதாவது ஒரு சர்ச்சையை தூண்டிவிடுகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவர் பேசிய வீடியோ ஒன்றில், கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லீம்கள் போட்ட ஓட்டு பிச்சையால்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே ஸ்டாலின் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்துக்கள் யாராவது ஓட்டு போடுவார்களா ஸ்டாலினுக்கு எனக் கூறினார். அது மட்டுமின்றி நாகர்கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏ., காந்தியை குறித்தும் தவறுதலாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பாதிரியார்களால்தான் தமிழகத்தில் மதக்கலவரம் தூண்டப்படுகிறது என்று சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

Similar News