புதுச்சேரி: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு.!
பிரதமர் மோடி கலந்து கொண்டு பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக, பாமக இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாளை பிரச்சாரம் செய்ய உள்ளார். இதனால் ஏஎப்டி மில் திடலில் மாலை 4 மணிக்கு பிரமாண்ட கூட்டம் நடைபெறுகிறது.
அந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். இந்நிலையில், பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.