"குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்குறாங்களாம் புதுச்சேரி பா.ஜ.க கூட்டணி அரசு! இங்கே எப்போ" - தி.மு.க அரசை நோக்கி திரும்பும் குடும்பத்தலைவிகள்
புதுச்சேரி அரசு குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் வாக்குறுதியை பொங்கல் பண்டிகை முதல் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது.
புதுச்சேரி அரசு குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் வாக்குறுதியை பொங்கல் பண்டிகை முதல் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தி.மு.க ஜெயிக்க முக்கிய காரணமாக இருந்த குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை என்ற வாக்குறுதி இதுவரை செயல்படுத்த முடியாத நிலையில் புதுவையை ஆளும் பா.ஜ.க என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்படுத்தி காண்பித்து சாதித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வழங்குவோம் என கடந்த சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க வழங்கிய 505 வாக்குறுதிகளில் முக்கியமான வாக்குறுதி ஆகும். ஆனால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தி.மு.க ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆகியும் நிறைவேற்ற வில்லை. அதற்கு நிதி நிலைமை சரியில்லை, ஆராய்ந்து வருகிறோம் என பல கதைகளை கூறி வருகின்றனர், ஆனாலும் மக்கள் அதனை நம்ப தயாராகவில்லை.
குறிப்பாக குடும்ப தலைவிகள் எந்த காரணத்திற்காக தி.மு.க'விற்கு ஓட்டு போட்டார்களோ அதுவே கிடைக்காமல் இருக்கும் நிலையில் இவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்பதை புரிந்து கொண்டு விட்டார்கள், இதனால் குடும்ப தலைவிகள் தி.மு.க அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். ஏற்கனவே அரசு ஊழியர்கள், அரசு ஆசிரியர்கள், ஒப்பந்த செவிலியர்கள், ஓய்வூதியர்கள், போக்குவரத்துக் கழகத்தினர் என தி.மு.க அரசு மீது கோபத்தில் இருப்பவர்கள் பட்டியலில் மத்தியில் குடும்ப தலைவிகள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
இதன் காரணமாகவே வரும் தேர்தல்களில் தி.மு.க பெரும்பான்மையே கிடைக்காமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்ற தி.மு.க'வின் வாக்குறுதி சட்டமன்ற தேர்தலின் போது பெண் வாக்காளர்களை பெரிதாக கவர்ந்தது தி.மு.க வெற்றி பெற்றவுடன் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை தமிழக அரசு வழங்கும் என குடும்பத் தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.