லக்கிம்பூருக்கு 'பிண அரசியல்' செய்ய புறப்பட்ட ராகுல் - சமயோசிதமாக தடுத்து நிறுத்திய உபி அரசு!

Update: 2021-10-06 07:15 GMT

உபி'யில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்திற்கு செல்ல. ராகுல் காந்தி தலைமையிலான 5 பேர் கொண்ட காங்கிரஸ் குழுவுக்கு உத்தரபிரதேச அரசு செவ்வாய்க்கிழமை அனுமதி மறுத்துள்ளது.

உபியின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் கலவரத்தில் ஈடுபட்டதில் பா.ஜ.க தொழிலாளர்களின் அணிவகுப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அதன்பிறகு ஏற்பட்ட வன்முறையால் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் 4 பேர் பா.ஜ.க'வினர். சட்டம் ஒழுங்கு நிலைமை காரணமாக லக்னோவில் சி.ஆர்.பி.சி பிரிவு 144 ன் கீழ் தடை உத்தரவு விதிக்கப்பட்டதால் மாநில அரசு அனுமதி மறுத்தது . தடை உத்தரவு நவம்பர் 8 வரை நீடிக்கும். கோவிட் 19 நெறிமுறையை பின்பற்றிய உபி அரசாங்கம் அங்கு கூட்டம் கூடாமல் இருக்கவும், அதனால் தொற்று பரவாமல் இருக்கவும் தமை உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆனால் இந்த தடை உத்தரவையும் மீறி அங்கு நடந்த கலவரத்தை அரசியலாக்க தனது ஆதரவாளர்கள் சச்சின் பைலட், சரஞ்சித் சிங் சன்னி, பூபேஷ் பாகல் மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோருடன் "அரசியல் சுற்றுலா" செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டுருந்ததால் அதனை உத்திரபிரதேச அரசு தடை விதித்துள்ளது

மேலும் அமைதிக்கு பாதகம் ஏற்படுத்த முயன்றதால் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா மற்றும் தீபிந்தர் ஹூடா மற்றும் அஜய் குமார் லல்லு உட்பட 11 பேரை ஐபிசி பிரிவு 107/16 இன் கீழ் உத்தரபிரதேச அரசு பதிவு செய்தது. குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக ஹர்கான் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது மற்றும் அவர் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள பிஏசி விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டார். அங்கு ஆளும் யோகி அரசு நிலமையை சமயோசிதமாக கையாண்டதால் பெரும் வன்முறை தடுக்கப்பட்டது

இதற்கிடையில் உள்துறை மற்றும் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா வன்முறை நடந்த இடத்தில் அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ரா இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் அந்த கலவரத்தில் புகுந்த வாகனம் கலவரக்காரர்கள் தாக்கியதில் அதன் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த காரணமாகவே அங்கு விபத்தை ஏற்படுத்தியது என்றும் விளக்கமளித்துள்ளார்.

Source - OpIndia

Tags:    

Similar News