ராஜேந்திர சோழன் யாரு தெரியும்ல நம்ம உதயநிதிதான் - செந்தில்பாலாஜி வைத்த ஐஸ்
உதயநிதி ராஜேந்திர சோழனோடு செந்தில் பாலாஜி ஒப்பிட்டு பேசிய விவகாரம் பரபரப்பாகியுள்ளது.
உதயநிதி ராஜேந்திர சோழனோடு செந்தில் பாலாஜி ஒப்பிட்டு பேசிய விவகாரம் பரபரப்பாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார். கோவை கொடிசியா மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்பொழுது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, 'ராஜராஜசோழன் ராஜேந்திர சோழனை பெற்று சான்றோர் ஆக்கினார். அதேபோல் சின்னவரை பெற்று சான்றோர் ஆக்கி உள்ளார் தளபதி.
கடந்த ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சியை விட கோவை ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பு வளர்ச்சி பெறும், அன்னூர் தொழில்நுட்ப பூங்கா தொடர்பாக அரசியல் கட்சியினை தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்' எனவும் கூறினார்.