தி.மு.க.வுக்கு சாதகமாக்க வாக்கு எண்ணும் மையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பழுது!

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-21 07:37 GMT

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டத்தில், மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதே போன்று மல்லூர், ஆட்டையாம்பட்டி மற்றும் இளம்பிள்ளை உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் இளம்பிள்ளையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் செயல்படவில்லை என்று அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தியது. 200க்கும் மேற்பட்டோர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. போலீசார் குவிக்கப்பட்டு அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். அதிமுகவினர் கூறும்போது, திமுக வேட்பாளர்களை வெற்றிபெறுவதற்கான சதி திட்டங்கள் நடைபெறுகிறது. அதற்காகவே சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் செய்துள்ளனர் என்று குற்றம்சாட்டினர்.

Source, Image Courtesy: News 7 Tamil

Tags:    

Similar News