"சில காலம் போகட்டும்" - ட்விஸ்ட் வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி !

Breaking News.

Update: 2021-09-19 06:30 GMT

"தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து கூறுவதற்கு சில காலம் அவகாசம் தேவை" என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்ற பின்பு அவர் கவர்னர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நான் இப்போதுதான் தமிழக கவர்னராக பொறுப்பேற்று இருக்கிறேன். பழமை வாய்ந்த தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். தமிழ் மொழியை கற்றுக்கொள்ளவும் முயற்சி செய்வேன். தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தின்படி பாடுபடுவேன். தமிழக அரசுக்கு என் முழு ஒத்துழைப்பு வழங்குவேன். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்படுவேன்" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், "தமிழக அரசு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தி உள்ளது. தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து கூறுவதற்கு சில காலம் அவகாசம் தேவை" என தெரிவித்துள்ளார்.


Source - Maalai malar

Tags:    

Similar News