சசிகலா அழைப்பு.. அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி.!

சசிகலா அழைப்பு.. அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி.!

Update: 2021-02-24 14:37 GMT

அதிமுகவினரை சசிகலா அழைக்கவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் அமைச்சர் ஜெயக்குமார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: சசிகலாவின் அழைப்பு அதிமுகவினருக்கு எந்த வகையிலும் பொருந்தாது. அவர் அமமுகவினரைத்தான் அழைத்துள்ளார். மேலும், சரத்குமார் -அதிமுக கூட்டணியில்தான் நீடித்து வருகிறார் என்று கூறினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ‘‘சசிகலா ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என கூறியிருந்தார். தற்போது அதிமுகவினர் ஒரு பக்கம் தேர்தல் வேலைகளை கவனித்து வருகின்றனர். இந்த வேளையில் சசிகலாவின் பேட்டி கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News