தினகரனால்தான் சசிகலா இந்த முடிவு எடுத்தார்.. திவாகரன் பரபரப்பு பேட்டி.!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து தமிழகம் திரும்பிய சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Update: 2021-03-04 10:48 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து தமிழகம் திரும்பிய சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பிய சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று பத்திரிகையாளர்கள் முன்பாக தெரிவித்தார்.


 



இதன் பின்னர் நேற்று இரவு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதற்கு அனைத்து கழக தொண்டர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரது அறிக்கை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், சசிகலா அரசியல் தொடர்பான முடிவுக்கு மிக முக்கிய காரணமே டிடிவி தினகரன்தான் எனவும், சசிகலா சிறை செல்லவும் அவர் தான் காரணம் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Similar News