நள்ளிரவில் வேல் பூஜை செய்த சசிகலா.. ரிசார்ட்டில் நடந்தது என்ன?

நள்ளிரவில் வேல் பூஜை செய்த சசிகலா.. ரிசார்ட்டில் நடந்தது என்ன?

Update: 2021-02-08 07:49 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற சசிகலா கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு அருகே உள்ள தேவனஹள்ளியில் கடந்த ஒரு வாரமாக தன்னை தனிமைப்படுத்திக்க கொண்டார்.

தமிழகத்திற்கு இன்று காலை புறப்படுவார் என கூறப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு முதல் தங்கியுள்ள ரிசார்ட்டில் சசிகலா சிறப்பு வேல் பூஜை செய்துள்ளார்.

இதற்கு என்று திருப்பதியில் இருந்து 2 சிறப்பு புரோகிதர்களை வரவழைத்து பூஜை செய்துள்ளார். எதற்காக இந்த பூஜை என்று சொல்ல மறுத்துள்ளனர். மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கு என்றே சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சசிகலா இன்று கர்நாடகாவில் இருந்து தமிழகம் செல்வதற்கு தயார் நிலையில் உள்ளார். காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் புறப்பட வேண்டும் என்று சிறப்பு புரோகிதர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது.
 

Similar News