சாட்டை துரைமுருகன் உட்பட தம்பிகளை உடனே விடுதலை செய்க.. பொங்கியெழுந்த சீமான்.!

தமிழ்த் தேசிய தலைவரை இழிவாக பதிவிட்டவரை, போலீசார் முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிடச்செய்த 4 பேரை கைது செய்துள்ளது அரசியல் கால்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு. எனவே கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2021-06-12 05:46 GMT

தமிழ்த் தேசிய தலைவரை இழிவாக பதிவிட்டவரை, போலீசார் முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிடச்செய்த 4 பேரை கைது செய்துள்ளது அரசியல் கால்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு. எனவே கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.




 


இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற எம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து, புரிதல் ஏற்படுத்தி காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிட வைத்த ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ் என்ற மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் ஆகியோரை காவல்துறை திடீரென கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.


 



மாற்றுக்கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும் வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து அவருக்குப் புரிதலை ஏற்படுத்திக் காவல்துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொளி வெளியிட செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு.

இதை மாபெரும் குற்றம் எனக்கருதி, தம்பிகளை கைது செய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல். சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ள தம்பிகள் சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News