முதியவர் டி.ஆர் பாலு கவனத்திற்கு... இதுதான் அண்ணாமலையின் அட்ரஸ்... நச்சுனு பதிலைக் கொடுத்த SG சூர்யா!

தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்திய டி.ஆர்.பாலு அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்த பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜே.சூர்யா.

Update: 2023-05-05 03:30 GMT

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் 2023, ஏப்ரல் 14ஆம் தேதி தி.மு.க ஃபைல்ஸ் என்ற தலைப்பில் திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது திமுக மத்தியில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. சில முக்கிய அமைச்சர்களின் சொத்து பட்டியல் அதிர வைக்கும் பல உண்மைகளை கொண்டு இருந்தது. ஆனால் இதற்கு திமுக சார்பில் பல்வேறு எதிர்ப்புகளும் கிளம்பி இருந்தது, குறிப்பாக திமுக சார்பில் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை அவர்களுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள்.



இந்த வக்கீல் நோட்டீஸுக்கு பதிலை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் வெளிப்படையாக கொடுத்து இருந்தார். மேலும் டி ஆர் பாலு அவர்கள் பல்வேறு நிறுவனங்களில் இயக்குனராக இருப்பதற்கு ஆதாரம் இருக்கின்றது என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.பாலு 21 கம்பெனிகளுக்கு செயல் இயக்குனராக நான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதில் மூன்று கம்பெனிகளில் மட்டுமே நான் பங்குதாரராக இருப்பதாக தெரிவித்து இருந்தார். மேலும் அரசியல் அறிவே இல்லாத, அட்ரஸ் இல்லாத சாதாரண அண்ணாமலை பற்றி நான் பேசுவது சரியில்லை என்று கூறி, நானே பேசுகிறேன் என்று வார்த்தைகளை பிரயோகப்படுத்தி இருக்கிறார்.


Twitter Source: Image 

இதற்கு சரியான பதில் இல்லை தற்போது பா.ஜ.க சார்பில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பா.ஜ.க மாநில செயலாளர் SG.சூர்யா அவர்கள் டி.ஆர் பாலு அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து இருக்கிறார். அரசியல் அறிவில்லாத, அட்ரஸ் இல்லாத ஒரு சாதாரண அண்ணாமலையைப் பற்றி நாம் பேசுவது சரியில்லை, நானே பேசக் கூடாது என்று பேசியுள்ளீர்கள்.


தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு அட்ரஸ் உண்டு. அவர் 9 வருடம் பணியாற்றிய கர்நாடக காவல்துறை அவரது அட்ரஸ். 2 ஆண்டு அரசியல் அனுபவமே இருந்தாலும், உங்களைப்போன்ற 60 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவரை இன்று தஞ்சாவூர் வீதியில் இறங்கி கொதிக்க வைத்துள்ளாரே, அது எங்கள் தலைவரின் அரசியல் அறிவு. பத்தாண்டுகள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும் அனுபவம் இல்லாமல் செயல்பட்டு வரும் தி.மு.க அரசுக்கு வழிகாட்டியாக இருக்கிறாரே தலைவர் அண்ணாமலை, அது அவரது அட்ரஸ். சேது சமுத்திரம் திட்டம் வந்தால், கனிமொழி, TR பாலு வைத்திருக்கும் கப்பல் கம்பெனிகள் செழிக்க தான் என்று நெற்றிப்பொட்டில் அடித்து கூறினாரே தலைவர் அண்ணாமலை. அந்த கப்பல் கம்பெனி கருத்துக்கு இன்று வரை விளக்கம் அளிக்காமல் கப்சிப் என நீங்கள் இருக்கின்றீர்களே, அது தான் தலைவர் அண்ணாமலையின் அட்ரஸ், கடைசியாக படபடப்பில் முதியவர் டி. ஆர் பாலு நிதானத்தை இழக்காமல் செயல்படுங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News