பலநூறு கோடிகள் வியாபாரம் ஆகும் ஷாருக்கான் தன் மகனுக்கு ரூ.4500 மணியார்டர் சிறைக்கு அனுப்பினார் !

Update: 2021-10-16 10:15 GMT

பலநூறு கோடிகள் வியாபாரம் ஆகும் நடிகர் ஷாரூக்கான் மகனின் சிறை செலவிற்காக 4500 ரூபாய் பணத்தை மணியார்டர் அனுப்பியுள்ளார் ஆர்யன்கானின் தாய்.

இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடந்த 3-ந்தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார், ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்க மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு மறுத்து விட்டது.

இதற்கிடையில் ஜெயிலில் உள்ள கேண்டீனில் செலவழிப்பதற்காக மகன் ஆர்யன் கானுக்கு அவரது தந்தை ஷாருக்கான் ரூ.4 ஆயிரத்து 500 மணிஆர்டர் அனுப்பி உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டு நிதின் வேச்சல் கூறியதாவது, "சிறை கைதிகளுக்கு அதிகபட்சம் ரூ.4 ஆயிரத்து 500 மணி ஆர்டர் அனுப்ப விதிமுறை உள்ளது. அதன் அடிப்படையில் ஆர்யன்கானுக்கு அந்த தொகையை ஷாருக்கான் அனுப்பி உள்ளார். கடந்த திங்கட்கிழமை அவருக்கு அந்த பணம் கிடைத்தது. வெளியில் இருந்து உணவு கொடுக்க அவருக்கு அனுமதி இல்லை" என கூறினார்.


Source - Maalai malar

Tags:    

Similar News