கோவக்கார சித்தார்த்'தின் வெறிபிடித்த ட்விட் ! - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

Breaking News.

Update: 2021-09-13 07:30 GMT

"பொய் சொன்னா அறைவிழும்" புகழ் சித்தார்த், நேற்று ட்விட்டரில் "பொறுக்கி பசங்க இதுவே வேலையா போச்சு" என புலம்பாத குறையாக ட்விட் செய்தது இணைய உலகில் பரபரப்பானது.

தி.மு.க'விற்கு மறைமுக கொள்ளை பரப்பு செயலாளராக திரையுலகில் விளங்கும் சிலரில் முக்கியமான நடிகர் சித்தார்த், நடிப்பதை தவிர நடிகனாகிய சித்தார்த் அனைத்து விஷயங்களையும் செய்வார். ஏதாவது கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் புலம்பி தீர்ப்பார்! நேற்று ட்விட்டரில் பிரபல வலதுசாரி சிந்தனையாளர் செல்வ குமார் தனது ட்விட்டர் பதிவில், "நீட் தேர்வை முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ரத்து செய்வோம் - தேர்தல் வாக்குறுதி

-

இன்று நீட் நடக்கிறது

-

பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் - என கூறிய

ஐயா சித்தார்த் என்ன பண்ண போறீங்க?" என கேள்வி எழுப்பினார் சித்தார்த்'ன் ட்விட்டர் முகவரியை குறிப்பிட்டு.

அதற்கு பதிலளித்த கோவக்கார சித்தார்த் "மூதேவி கோவமோ, சந்தேகமோ வந்தா துப்பு இருந்தா போய் நீ கேளு, இல்ல உங்க அப்பனை போய் கேளு. நான் என் வேலைய தான் பாத்துட்டு இருக்குறேன். பொறுக்கி பசங்க இதுவே வேலையா போச்சு, டுவிட்டரை டாய்லெட் ஆக்கி வச்சிருக்கீங்க" என மூன்றாம் தர நபர் போல் ட்விட் செய்துள்ளார். இதற்கு ஏன் தி.மு.க என்றால் உங்களுக்கு கோபம் வராதோ என நெட்டிசன்கள் பதில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News