தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியே பா.ஜ.க'வின் இலக்கு - அண்ணாமலை சபதம்
தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி ஏற்படுத்துவதான் பா.ஜ.க'வின் நோக்கம் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி ஏற்படுத்துவதான் பா.ஜ.க'வின் நோக்கம் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் தேசூமுகிபேட்டையில் சிவனடியார் சிவ தாமோதரனை அண்ணாமலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அண்ணாமலை கூறியதாவது, 'அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதே ஆன்மீக ஆட்சி, தமிழகத்தில் பா.ஜ.க ஆன்மீக ஆட்சி அமைக்கும்' என கூறினார்.