ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்.!

இவரது மறைவு காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Update: 2021-04-11 03:27 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் 63, உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு விருதுநகர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாதவராவ் போட்டியிட்டார். இவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதன் பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் பரப்புரையில் ஈடுபடவில்லை, அவருக்கு பதில் அவரது மகள்தான் தேர்தல் பணிகளையும், பரப்புரைகளிலும் ஈடுபட்டு வந்தார்.

நுரையீரல் பிரச்சனை காரணமாக அவர் மீண்டும் மதுரை கே.கே.நகர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. இதன்பின்னர் ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த மாதவராவ் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 8 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவரது மறைவு காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Similar News