"இதுலாம் ஒரு சாப்பாடா" தி.மு.க. எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்ட அரசு பள்ளி மாணவிகள்!

Update: 2022-03-17 11:07 GMT

ஜோலார்பேட்டையில் உள்ள அரசு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த திமுக எம்.எல்.ஏ.,வை மாணவிகள் முற்றுகையிட்டுள்ள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். அதே சமயம் பள்ளி விடுதியிலும் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். அதே போன்று மதிய வேளையில் மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. ஆனால் வழங்கப்படும் உணவுகள் எதுவுமே தரமற்ற முறையில் இல்லை என மாணவிகள் பல முறை பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்க எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், பள்ளி விழாவில் கலந்து கொள்வதற்காக திமுக எம்.எல்.ஏ., தேவராஜ் வந்திருந்தார். அப்போது அவரிடம் மதிய உணவு வழங்கியதை எடுத்து சென்று காண்பித்து முற்றுகையிட்டுள்ளனர். இது போன்று தரமற்ற உணவுகளை வழங்கினால் எப்படி சாப்பிடுவது என்று கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ., மாணவிகளிடம் சமாதானம் பேசினார். உணவுகளை பரிசோதனை செய்கிறேன் இப்போது அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ., வை மாணவிகள் முற்றுகையிட்ட சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Source, Image Courtesy: News 7 Tamil

Tags:    

Similar News