இணைந்து பணியாற்றுகிறோம்.. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி சொன்ன தமிழக நிதி அமைச்சர்!

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குழுவில் தன்னை சேர்த்ததற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் நன்று கூறியுள்ளார்.

Update: 2021-09-27 05:34 GMT

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குழுவில் தன்னை சேர்த்ததற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் நன்று கூறியுள்ளார்.


இது பற்றி தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: ஜிஎஸ்டி கவுன்சில் மறுசீரமைப்பு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. மத்திய நிதியமைச்சருக்கும், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் நன்றி. இந்த பணிகளை செய்யும்படி தனக்கும், தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியிடமும் முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். சக உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News