இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் தூக்கி எறியப்படும்: அண்ணாமலை நம்பக்கை!

காங்கிரஸ் 2 மாநிலங்களில் ஆட்சி நடத்தி வரும் நிலையில் அதையும் விரைவில் அவர்கள் இழப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-10 08:40 GMT

காங்கிரஸ் 2 மாநிலங்களில் ஆட்சி நடத்தி வரும் நிலையில் அதையும் விரைவில் அவர்கள் இழப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

5 மாநில தேர்தல் முடிவுகள் பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்; மீண்டும் நமது நாடு பிரதமர் மோடியுடன் பயணிப்பதை தேர்தல் முடிவு உறுதி செய்துள்ளது.

மேலும், உத்தரபிரதேசத்தில் 33 ஆண்டுகளுக்கு பின்னர் தொடர்ந்து 2வது முறையாக ஒரு கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இது மிகப்பெரிய சரித்திரம் ஆகும். சில எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் இன்னும் 6 மாதங்களில் மாற்றம் வரும் என்று சொல்லி வந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்கு காரணம் பிரதமர் மோடி கொரோனா தொற்றின் போது மிகவும் சாமர்த்தியாக கையாண்டார். இதற்காக மக்கள் கொடுத்த பரிசு தேர்தல் வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News