சென்னை வரும் பிரதமர் மோடி: 50 ஆயிரம் தொண்டர்களுடன் வரவேற்க தயாராகும் பா.ஜ.க.!

Update: 2022-05-26 08:11 GMT

இன்று அரசு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகின்றார். அவரை 50,000 தொண்டர்களுடன் வரவேற்பதற்காக பா.ஜ.க. தயாராகி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக பா.ஜ.க. தலைவர் செய்து வருகிறது.

பிரதமர் மோடியை வரவேற்பதற்காக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்ற வண்ணம் உள்ளனர். இன்று மாலை பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியானது சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. அங்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையின் திட்டங்கள் மற்றும் ரயில்வே துறையின் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

மேலும், சென்னை நேப்பியர் பாலம் முதல் நேரு விளையாட்டு அரங்கம் வரையில் 25 விதமான வரவேற்பு கொடுப்பதற்கு தமிழக பா.ஜ.க. ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று தேசிய நெடுஞ்சாலைத்துறையின் புதிய திட்டங்கள் மற்றும் ரயில்வே துறையின் புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மற்றும் தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கு பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: One India Tamil

Tags:    

Similar News