தமிழக தேர்தல்: 1.55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.!
தமிழகத்தில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 6ம் தேதி (ஏப்ரல்) நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த தேர்தலில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.