ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி: ஜனாதிபதியிடம் முறையிட்ட சந்திரபாபு நாயுடு!

ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும், உடனடியாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் முறையிட்டுள்ளார்.

Update: 2021-10-26 04:04 GMT

ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும், உடனடியாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் முறையிட்டுள்ளார். ஆந்திராவில் ஆளுகின்ற ஒய்.எஸ்.ஆர். கட்சி தொண்டர்கள் கடந்த 19ம், தெலுங்கு தேசம் கட்சியின் அலுவலகங்கள் மற்றும் கட்சினருடைய மூத்த தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து ஆந்திராவில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்தார். இது பற்றி அவர் கூறியதாவது: மாநில மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சட்டத்தினை கூட பெற முடியவில்லை. தினமும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். அரசால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதம், ஜனநாயகம் மற்றும் அரசின் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் கற்பனை செய்ய முடியாத உச்சத்தை எட்டியுள்ளது.

மேலும், ஒய்.எஸ்.ஆர். ஆளும் மாநில அரசு அரசியலமைப்பை தொடர்ந்து மீறுவதை பார்த்து, மத்திய அரசு அமைதியாக இருந்தால், தேசத்தின் சிதைவுக்கு விதைகளை விதைப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளது. எனவே ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Maalaimalar


Tags:    

Similar News