மதுரை: வீட்டை வாடகைக்கு எடுத்து மதமாற்றம்: பா.ஜ.க., இந்து முன்னணி தடுத்து நிறுத்தம்!

மதுரையில் வீட்டை வாடகைக்கு எடுத்து கிறிஸ்தவத்தினர் மதமாற்றும் வேலைகளில் ஈடுபட்டு வந்ததை இந்து முன்னணி, மற்றும் பாஜகவினர் தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

Update: 2022-02-01 10:24 GMT

மதுரையில் வீட்டை வாடகைக்கு எடுத்து கிறிஸ்தவத்தினர் மதமாற்றும் வேலைகளில் ஈடுபட்டு வந்ததை இந்து முன்னணி, மற்றும் பாஜகவினர் தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரை தெற்கு பெருமாள் மேஸ்திரி தெருவில் மார்த்தாண்டன் என்பவருடைய வீட்டை வாடகைக்கு எடுத்து, நல்வாசனை ஏஜி சபை என்ற பெயரில் கிறிஸ்தவ மத வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கிறிஸ்தவர்கள் வழிப்பாட்டு தலத்தை மதமாற்றும் தலமாக மாற்றி வந்துள்ளனர். இது பற்றி கேள்விப்பட்ட இந்து முன்னனி மாவட்ட தலைவர் அரசப்பன், பாஜக ஒபிசி பிரிவின் மாநில செயலாளர் ராஜகண்ணன், மண்டல தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர்கள் கிறிஸ்தவ மத மாற்றும் வீட்டுக்கு சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மதமாற்றும் வேலையில் ஈடுபட்டிருந்த பிரவீன் ராஜ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறது என இந்து முன்னணியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News