'ஊழல் பண்றதுல காங்கிரஸ் கட்சியே ஓவர்டேக் பண்றீங்களே!' - ஆம் ஆத்மி கட்சியை சாடிய ஜே.பி.நட்டா

காங்கிரஸ் அரசின் ஊழல் சாதனைகளை ஆம் ஆத்மி கட்சி முறியடித்துள்ளது என பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

Update: 2022-10-17 10:11 GMT

காங்கிரஸ் அரசின் ஊழல் சாதனைகளை ஆம் ஆத்மி கட்சி முறியடித்துள்ளது என பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது முந்தைய காங்கிரஸ் அரசு செய்திருந்த அனைத்து ஊழல் சாதனைகளையும் மாற்றி முறியடித்துள்ளது டெல்லியில் காய்கறிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி முறியடித்துள்ளது. கலால் துறையிலும், போக்குவரத்து துறைக்கு பேருந்து வாங்குவதிலும், கழிப்பறை கட்டுவதிலும் ஊழல் செய்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சி ஊழலின் கட்சியாக மாறி உள்ளது. டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என அரவிந்த் கெஜ்ஜரிவால் கூறினார் ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு எல்லா இடத்திலும் மதுக்கடைகளை திறந்து உள்ளார்' எனவும் பேசினார் ஜே. பி.நட்டா.


Source - Maalai malar 

Similar News