அண்ணாமலை அறிவித்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த தி.மு.க அரசு

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க அரசு அனுமதி மறுத்துள்ளது.

Update: 2022-09-25 11:35 GMT

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க அரசு அனுமதி மறுத்துள்ளது.

கடந்த நான்கு நாட்களாக இந்துத்துவா தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசும் சம்பவம் தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தேசிய புலனாய்வு முகமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது ரெய்டு நடவடிக்கை எடுத்ததிலிருந்து இந்த சம்பவம் தொடர்வது இந்துத்துவா தலைவர்கள் மத்தியிலும், மக்களின் மத்தியிலும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிட்டு இருந்தார். ஆனால் காவல்துறை இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளது, மேலும் இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையை பா.ஜ.க'வினர் கலந்து ஆலோசித்து வருகின்றனர்.



Source - Polimer

Similar News