மேற்கு வங்கத்தில் அடுத்த ஆட்சி எங்களுடையது: பா.ஜ.க. தலைவர் பேச்சு.!

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆட்சி எங்களுடையது: பா.ஜ.க. தலைவர் பேச்சு.!

Update: 2021-02-15 18:12 GMT

மேற்கு வங்கத்தில் அடுத்தது எங்களுடைய ஆட்சிதான் என்று மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜக அம்மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், மேற்கு மிட்னாபூரின் ஹரிராஜ்பூரில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அம்மாநில பாஜக தலைவரும் மக்களவை எம்.பி.யுமான திலீப் கோஷ் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு சவால் விடுத்துள்ளார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும். பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைப்போம் என பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். தற்போது அம்மாநிலத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய பாஜக தலைவர்கள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்பத குறிப்பிடத்தக்கது.

Similar News