சிவகங்கையில் அதிர்ச்சி: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஒரு ஓட்டுகூட வாங்கவில்லை!

சிவகங்கை நகராட்சிக்கு கடந்த பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 வார்டுகளில் 125 பேர் போட்டியிட்டனர்.

Update: 2022-02-22 08:40 GMT

சிவகங்கை நகராட்சிக்கு கடந்த பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 வார்டுகளில் 125 பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில், சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் செங்கோல் என்பவரும் ஒரு ஓட்டுகூட பெறாதது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேட்பாளர் செங்கோல் கூட அவரது கட்சிக்கு ஓட்டு போடாதது அந்த கட்சியினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தார் மட்டுமின்றி கமல்ஹாசனின் ரசிகர்கள் கூட ஓட்டுபோடவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News