அண்ணன் தண்ணீரில் நடக்கக் கூடாது என தம்பிகள் உதவி - தண்ணீரில் இறங்காத திருமா'விற்கு முட்டு கொடுக்கும் வன்னியரசு !

Update: 2021-11-30 10:15 GMT

"முழங்கால் அளவு தண்ணீரில் தலைவர் நடக்கக்கூடாது என்பதற்காக நாற்காலிகளை போட்டு உதவுகிறார்கள் தம்பிகள்" என திருமாவளவன் தண்ணீரில் நடக்காமல் வந்ததற்கு முட்டு குடுத்துள்ளார் வி.சி.க'வின் வன்னியரசு.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேளச்சேரியில் வசித்து வருகிறார். நேற்று அவர் வெளியில் செல்வதற்காக டிப்டாப் உடை அணிந்து காலில் ஷூ அணிந்தபடி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது முழங்கால் அளவுக்கு தரை தளம் பகுதியில் தண்ணீர் தேங்கி இருப்பதை பார்த்து செய்வதறியாது நிற்கும் போது. அவரது தொண்டர்கள் அவரை நாற்காலிகள் மீது கால்வைத்து நகர்த்தி கொண்டு வந்து கார் வரை விட்டனர்.  

இது என்னய்யா புது பழக்கம் சாருக்கு கால் தண்ணீர படாதோ?, ஏன் தண்ணீரில் பட்டா கரைச்சுடுவாரோ என்ற கமெண்டுகளுடன் வீடியோ வைரலானது. இது அகில இந்திய அளவிலும் பரவியது.

இந்நிலையில் இதற்கு முட்டு கொடுக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு கூறியிருப்பதாவது, "ஒரு தலைவர் நினைத்தால் சொகுசு ஓட்டலில் கூட தங்கலாம்.ஆனால் அதையெல்லாம் விடுத்து தம்பிகளோடவே தங்குகிறார்.முழங்கால் அளவு தண்ணீரில் தலைவர் நடக்கக்கூடாது என்பதற்காக நாற்காலிகளை போட்டு உதவுகிறார்கள் தம்பிகள். இது கூட பொறுக்க முடியாத அரசியல் வன்மத்தர்களும் அறிவு பலவீனமானவர்களும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள்" என இந்த செயலுக்கு முட்டு கொடுக்கும் விதமாக வன்னியரசு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Source - One India Tamil

Tags:    

Similar News