ஆர்.எஸ்.எஸ் பற்றிய திருமாவின் பயம் - அவரே கூறிய வலுவான காரணம்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் சார்ப்பில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்த நிலையில் நீதிமன்றம் பேரணிக்கு அனுமதி அளித்திருந்தது.

Update: 2022-10-02 02:03 GMT

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் சார்ப்பில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்த நிலையில் நீதிமன்றம் பேரணிக்கு அனுமதி அளித்திருந்தது. இதனை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் திருமாவளவனின் மேல்முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல. குற்றவியல் சார்ந்த வழக்கு என்பதால் உச்சநீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய முடியும் என தெரிவித்திருந்தனர். இதற்கிடையில், தமிழகத்தில் சட்ட ஒழுங்கை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அரசு அனுமதி மறுத்தது. இதனை வரவேற்பதாக திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில், அவர் ஆர்.எஸ்.எஸ்க்கு ஆதரவாக பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2018ம் ஆண்டு தேசம் காப்போம் என்னும் மாநாடு மதுரையில் நடைபெற்றது. இதில், பேசிய திருமாவளவன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினுடைய மாநில தலைவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? மதுரை மாவட்ட தலைவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? ஏன் தேசிய தலைவர் பெயர் உங்களுக்கு தெரியுமா? அவர்கள் என்றைக்காவது தங்களது பெயரை வால்போஸ்டர், சுவரொட்டிகளில் அச்சிட்டது உண்டா? துண்டறிக்கையிலே அச்சிட்டது உண்டா? என்றைக்காவது மேடையேறி பேசியது உண்டா? தன்னுடைய தலைவர் பின்னால் நின்றால் தான் தன்னுடைய முகம் தெரியும் தொலைக்காட்சியில் என்று என்றைக்காவது முண்டியடித்துக்கொண்டு மேடையிலே ஏறியது உண்டா? நான் மட்டும் ஏன் பின்னால் உட்கார வேண்டும், நானும் முன்னால் தான் உட்காருவேன் என்று முன்வரிசையிலே யாராவது வந்து முண்டியடித்துக்கொண்டு உட்கார்ந்து பார்த்தது உண்டா? ஆனால், அவர்கள் மிகவும் அர்பணிப்பாக பணியாற்றுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் உள்ள 13 ஆயிரம் பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் முழுநேர பணியாளர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பதவி ஆசை கிடையாது விளம்பர ஆசை கிடையாது தன் வாழ்வை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டு பணியாற்றுகிறார்கள். அந்த தியாகத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு கொள்கை மீது வெறி இருக்கிறது என தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source - Dinamalar

Similar News