தமிழ்நாட்டுக்கு தனி கொடி - திருமாவளவனின் பிரிவினை சிந்தனை !

Update: 2021-10-24 07:00 GMT

"தமிழகத்திற்கு தனிக்கொடி அறிவிக்க வேண்டும்" என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவில் பங்கேற்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது, "மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை தமிழக அரசு கொண்டாட வேண்டும் என்றும், தமிழகத்திற்கு தனிக்கொடி அறிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே காஷ்மீர் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற கோரிக்கைகளை எழுப்பி அங்கு பிரிவினைவாதிகள் கலவரங்களை ஏற்படுத்தியதால் அங்கு வாழும் மக்கள் நிம்மதியை இழந்து தீவிரவாத பயத்துடனே வாழ்ந்தனர். இந்த நிலையில் தமிழகத்திற்கு தனிகொடி போன்று திருமாவளவன் கேட்பது பிரிவினையை தூண்டுவது போல் உள்ளது என சர்ச்சை கிளம்பியுள்ளது.


Source - Thanthi TV

Tags:    

Similar News