சனாதனத்தை ஒழிக்கும் அணிக்கு திருமாவளவன் தலைமை - உசுப்பேற்றும் பா.சிதம்பரம்!

சனாதனத்தை ஒழிக்கும் போராட்டத்தை திருமாவளவனின் தலைமையை ஏற்க தயார் பா.சிதம்பரம் பேச்சு.

Update: 2022-10-11 02:15 GMT

கோவையில் சிவானந்தாகாலனி பகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் மணி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அமைச்சர் செந்தில் பாலாஜி, மனிதநேய கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். VCKவினர் திருமாவளவனுக்கு அன்பளிப்பாக தங்க நாணயங்கள் வழங்கினார்கள். அதனை தொடர்ந்து பா.சிதம்பரம் அவர்கள் பேசுவது, சனாதனத்தை ஒழிக்கும் போராட்டத்திற்கு திருமாவளவன் தலைமை ஏற்க தயார் என்று கூறியிருக்கிறார்.


போராடி அனைத்து தடைகளையும் உடைத்து நாடாளுமன்றத்தில் அறியாசனம் போட்டு அமர்ந்து உள்ளார். நூற்றாண்டு காலம் திருமாவளவன் வாழ்த்துகிறேன் வி.சி.க கட்சியின் தொண்டர்களுக்காக கோரிக்கை நான் சொல்வது திருமாவளவனின் கொள்கைகளை கடைசி வரை பின்பற்ற வேண்டும். 75 கால ஆண்டு கால சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்.


ஆனால் மக்களுக்கு 130 கோடி மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை. பல பேர் பேசவும், எழுதவும், போராடவும் சுதந்திரம் இல்லை. பழங்குடியினர் சிறுபான்மையினர் ஆகியோருக்கு இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. அமெரிக்காவின் கருப்பின மக்கள் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார்கள். அதேபோல நாமும் தொடர்ந்து போராட்ட வேண்டும் போராட்டத்தை என்றும் கைவிடக்கூடாது என்று கூறுகிறார். மேலும் சனாதனத்தை ஒழிக்கும் முயற்சியில் திருமாவளவன் தலைமை ஏற்பார் என்றும் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News