சாத்தூரில் ரூ.87 ஆயிரம் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை அதிரடி.!

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம் சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலரான போத்திராஜ் தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

Update: 2021-03-25 13:19 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் தேர்தல் பறக்கும்படை வாகன சோதனையில் 87 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம் சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலரான போத்திராஜ் தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த டூ வீலரை நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் ரூ. 87 ஆயிரம் பணம இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரித்ததில் பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை.

இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின், முரணாக பேசியதால் தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்த பணத்தை சாத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Similar News