'அடிமை இப்போ பேசுவாரு' - அமைச்சர் நேருவின் சர்ச்சை பேச்சு!

Update: 2022-05-30 04:34 GMT

தி.மு.க. ஒரு வருட சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருச்சியில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் நன்றி தெரிவித்து பேசினர். அதன் பின்னர் பேசத்தொடங்கிய அமைச்சர் கே.என்.நேருவின் பேச்சு தற்போது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

அதாவது அவர் பேசும்போது, நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள். இனி பொன்முடியின் அடிமை புகழேந்தி எல்.எல்.ஏ. பேசுவார் என்றார். இப்படி பொசுக்குனு அமைச்சர் அடிமைகள் என்று பேசியதை கேட்டு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அப்போது மேடையில் இருந்த சில தி.மு.க. நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்தனர். இப்படி நேரு பேசிவிட்டாரே என. இதனை சுதாரித்துக்கொண்ட அமைச்சர் பொன்முடி, நேரு எப்போதும் இப்படித்தான் அப்படியே பேச்சை மாற்றினார். 

Source, Image Courtesy: Asianetnews

Tags:    

Similar News