கடிதம் எழுதியதோடு இருக்காதீர்கள்: ஸ்டாலினுக்கு நிபந்தனை வைத்த டி.டி.வி. தினகரன்.!

பொதுமுடக்க காலங்களில் வங்கிக்கடன்களுக்கான மாத தவணை செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:;

Update: 2021-05-30 05:59 GMT
கடிதம் எழுதியதோடு இருக்காதீர்கள்: ஸ்டாலினுக்கு நிபந்தனை வைத்த டி.டி.வி. தினகரன்.!

பொதுமுடக்க காலங்களில் வங்கிக்கடன்களுக்கான மாத தவணை செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:




 


ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி இதனைச் செய்திட வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல. இப்பிரச்னையில் பிரதமரும், மத்திய நிதி அமைச்சரும் உடனடியாக தலையிட வேண்டும்.

தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களும் 'கடிதம்' எழுதியதோடு கடமை முடிந்தது என்று இல்லாமல் உரிய அழுத்தம் கொடுத்து ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன் மாதத்தவணைகளிலிருந்து விலக்கு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News