உதயநிதி துணை முதல்வர் ஆகணும் - முதலில் துண்டை போட்ட கௌதம சிகாமணி

'தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடியவர், உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக விரைவில் பொறுப்பேற்பார்' என கௌதம சிகாமணி எம்.பி கூறியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-12-04 13:10 GMT

'தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடியவர், உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக விரைவில் பொறுப்பேற்பார்' என கௌதம சிகாமணி எம்.பி கூறியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விழா நடைபெற்றது. இதில் பேசிய கௌதம சிகாமணி எம்.பி கூறியதாவது, 'உதயநிதி ஸ்டாலின் முதல் திரைப்படம் 'ஒரு கல், ஒரு கண்ணாடி' அப்பவே ஒரு ஒரு கல்லை எடுத்து விட்டார். அதன் மூலம் தமிழகத்தின் பெரும்பாலான மக்களை தன் ரசிகராக ஈர்த்தார்.

பின்னர் செங்கல்லை வைத்து பிரச்சாரம் செய்ததன் மூலம் மோடி, அமித்ஷா ஆகிய இருவரையும் ஒற்றை செங்கல்லால் ஆட்டி வைத்து விட்டார். பின்னர் ஒவ்வொருவரையும் பார்த்து, பார்த்து மேலே ஏற்றி விட்டார் அவர். இன்று பலரும் அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக ஆகியிருக்கிறார்கள். ஆனால் அவர் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே இருக்கிறார். மிக விரைவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் கண்டிப்பாக ஆவார்' என்று இப்பொழுதே துண்டை போட்டு வைத்துவிட்டார்.


Source - Junior Vikatan  

Similar News