PFI கூடாரமாக தமிழகம் மாறுகிறது - மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே!

சமாதான புறாக்களை பரக்கவிடுமாறும் தாக்குதல்களை இனி பொறுத்துக் கொள்ள முடியாது மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி.

Update: 2022-09-29 01:52 GMT

சென்னை கமலயத்தில் மத்திய உணவு விநியோகம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், பெட்ரோல் குண்டு வீற்ற தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்கு உரியது. நாடு முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் அவர்களின் உண்மை முகம் தெரிய வருகிறது. தமிழகத்தில் உள்ள அந்த அமைப்புகளுக்கு இதில் தொடர்பு இருக்கிறது. அவர்களின் எண்ணம் ஒருபொழுதும் நிறைவேறாது அவர்களின் திட்டம் தகர்த்தெறியப்படும்.


பிரதமர் மோடியின் அரசு பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் மீது தாக்குதல்களை பொறுத்துக் கொள்ள முடியாது. பா.ஜ.கவினர் எதையும் பார்த்த அஞ்ச மாட்டோம். நாங்கள் சமாதான புறாக்களை பறக்க விடமாட்டோம். சிறுத்தைகளை பாய விடுவோம். மக்களின் நலனுக்காக தரையில் இறங்கி போராடுவோம். தமிழக மக்கள் அமைதியை விரும்புவர்கள். தி.மு.க அரசுடன் காங்கிரஸ் இணைந்து கொண்டு அதிகாரியத்தை தற்போது துஷ்பிரயோகம் செய்து பயங்கரவாதத்தை பரப்புகிறது.


பீஹாரிலும், மேற்கு வங்காளத்திலும் இதே நிலைமைதான் காணப்படுகிறது. ராகுல் காந்தி குடும்பத்தையும் இணைப்போம், யாத்திரையையும் காங்கிரஸ் கட்சி இணைப்போம். யாத்திரையும் நடத்தினால் நல்லது. இனிமேல் நடைபெறக்கூடாது இத்தகைய குண்டுவெடிச்சு சம்பவங்கள். பா.ஜ.க மக்களின் குரலுக்காக ஒழித்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபடுகின்றது என்று கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: Oneindia News

Tags:    

Similar News