கட்சி வளர்ச்சிக்கு டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி மதுபானம், பணம் வசூல்: வி.சி.க. ஒன்றிய செயலாளர் அதிரடி கைது!

Update: 2022-03-21 02:43 GMT

தென்காசியில் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி பணம் மற்றும் மதுபானங்களை வாங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், கடையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருப்பவர் அன்பழகன். இவர் வசித்து வரும் வெங்கடாம்பட்டி கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு அடிக்கடி சென்று ஊழியர்களை மிரட்டி மதுபானங்களை வாங்கி செல்வதும், மற்றும் கட்சியின் வளர்ச்சிக்கு கடையில் இருக்கின்ற பணத்தையும் பிடுங்கி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பணம் மற்றும் மதுபாட்டில்களை ஊழியர்கள் தரமறுத்துள்ளனர். இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்களை அன்பழகன் மிரட்டியுள்ளார். இதனை அங்கு இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலானது. இதன் பின்னர் கடை ஊழியர் கடையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து விசிக ஒன்றிய செயலாளர் அன்பழகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Source, Image Courtesy: News 18 Tamil

Tags:    

Similar News