பிரசாந்த் கிஷோரால் தான் காரங்கிரசுக்கு எழுச்சி தர முடியும் ! - வீரப்ப மொய்லி அதிரடி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வீரப்ப மொய்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தவாரே சீர்த்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே ஜி23 என்ற குழுவால் கடிதம் எழுதினோம்.

Update: 2021-09-13 09:07 GMT

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வீரப்ப மொய்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தவாரே சீர்த்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே ஜி23 என்ற குழுவால் கடிதம் எழுதினோம்.

ஆனால் சோனியாகாந்தி அடிமட்ட அளவில் இருந்து சீர்த்திருத்தங்களை செய்ய முடிவு எடுத்தார். அவர் துடிப்பாக செயல்படுவதால் என்னை போன்றவர்கள் ஜி23 குழுவில் இருந்து விலகினோம். மேலும் அந்த குழுவில் இருந்து விடாப்படியாக இருக்கும் தலைவர்கள், காங்கிரசுக்கு எதிராக செயல்படுவதாக அர்த்தம்.

மேலும், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பல்வேறு மாநிலங்களில் வெற்றியை பெற்றுத்தந்துள்ளார். அவர் கட்சிக்கு வெளியில் இருந்து செய்வதை கட்சியில் இருந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும். எனவே அவரை காங்கிரஸ் கட்சியில் சேர்த்துக்கொண்டால் எழுச்சியை பெறமுடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News