உள்ளாட்சி தேர்தலில் ரசிகர்களுக்கு பச்சை கொடி! அரசியல் அஸ்திவாரம் போடுகிறாரா விஜய்?

Breaking News.

Update: 2021-09-19 06:15 GMT

நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தனது ரசிகர்களை களமிறக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 6 மற்றும் 9 என 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே தனது ரசிகர் மன்றத்தை கடந்த 2009'ம் ஆண்டு 'விஜய் மக்கள் இயக்கமாக' நடிகர் விஜய் மாற்றினார். இதனைதொடர்ந்து அவர் அரசியலுக்கு வர முனைப்பு காட்டுகிறார் என்ற கருத்துக்கள் நிலவி வந்த நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி மற்றும் தனது படத்தை பிரசாரத்திற்கு பயன்படுத்தவும் ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Twitter

Tags:    

Similar News