போன பொங்கலுக்கு ரூ.2,500 கொடுத்தாங்க! இப்போது ஏன் இல்லை: தி.மு.க.வினரை விரட்டிய பெண்கள்!

கடந்த அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 வழங்கினார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதனால் ஏழை, எளிய குடும்பங்கள் பொங்கலை சிறப்புடன் கொண்டாடினார்கள்.

Update: 2022-01-05 03:14 GMT

கடந்த அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 வழங்கினார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதனால் ஏழை, எளிய குடும்பங்கள் பொங்கலை சிறப்புடன் கொண்டாடினார்கள். இதனிடையே தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியில் அமர்ந்த நிலையில், இந்த பொங்கலுக்க உப்பு, புளி, மிளகாய்தூள் என்று அறிவிப்பை வெளியிட்டது. பரிசுத் தொகுப்பில் பணம் எதுவும் அறிவிக்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பினை திமுக அரசு நேற்று முதல் வழங்கியது. இதனை பெண்கள் வாங்க வரும்போது, வெறும் 21 பொருட்கள் என்று 50 கிராம், 100 கிராம் என்ற பாக்கெட்டுகளை போட்டுவிட்டு இதுதான் பொங்கல் பரிசு என திமுகவினர் கொடுத்தனர். இதனால் பெண்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்திருந்தது. 


அதே போன்று நெல்லை மாவட்டம், திசையன்விளை, மன்னராஜா கோயில் தெருவிலுள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை திமுக ஒன்றிய செயலாளரும், சேர்மனுமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் விநியோகித்தார். அப்போது பரிசு தொகுப்புகளை பெற வந்த பெண்கள் பலரும் ரொக்கம் ஏன் இல்லை என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.2500 வழங்கியதை போன்று ஏன் நீங்கள் இந்த முறை வழங்கவில்லை என்று கொந்தளித்தனர். இதனால் திமுக ஒன்றிய சேர்மேன் என்ன சொல்வது என்று சொல்ல முடியாமல் இருந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தார். அதே போன்று அவரது கட்சியை சேர்ந்தவர்களும் ரேஷன் கடையை விட்டு நகரத் தொடங்கினர். இதே போன்று தமிழகத்தில் பல ரேஷன் கடைகளில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News