அம்பலமான உண்மை - விநாயகரை பிடுங்கி எறிந்த ராகுல் காந்தி !

Rahul Gandhi's Petty Politics.

Update: 2021-09-11 12:45 GMT

நேரு குடும்பத்தின் இளவரசர் ராகுல் காந்தி ஹிந்து மத வெறுப்பின் உச்சமாக விநாயகர் படமே இல்லாமல் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை கடமைக்கு கூறியது நாடு முழுவதும் சலசலப்பை நேற்று ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் அப்படத்தில் விளக்கு மற்றும் பூவுடன் இருந்த விநாயகர் உருவத்தை எடிட் செய்து எறிந்துவிட்டு விளக்கு மற்றும் பூ'வை மட்டும் தனது ட்விட்டர் பதிவில் இணைத்தது அம்பலமாகியுள்ளது.

நேற்று விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹிந்து சமுதாயத்தில் அனைவராலும் விரும்பப்படகூடிய கடவுளாகவும், இந்தியாவில் அதிகம் ஆலயம் உள்ள கடவுளாகாகவும் விநாயகர் விளங்கி வருவதால் இந்துக்கள் அனைவருக்குமான பண்டிகை, இந்த பண்டிகை வேளையில் வழக்கம்போல் இந்துக்களை அவமதிக்கும் காங்கிரஸ் கட்சி தலைமை நேற்றும் தன் ஹிந்து வெறுப்பை உமிழ்ந்தது.

நேரு குடும்பத்தின் இளவரசரும், இந்தாலியை பிறப்பிடமாக கொண்ட சோனியாவின் புதல்வரும், காங்கிரஸின் வாழ்நாள் பிரதமர் வேட்பாளருமாகிய ராகுல் காந்தி விநாயகர் இல்லாத விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை தனது ட்விட்டரில் தெரிவித்தார். அந்த புகைப்படம் பற்றிய தகவல்கள் தற்பொழுது இணையங்களில் வெளியாகியுள்ளன. அதாவது ராகுல் இணையத்தில் பதிவேற்றிய புகைப்படம் விநாயகர் உருவத்துடன் இலையில் பூ மற்றும் அகல் விளக்குடன் இருப்பது போன்ற புகைப்படம். ஆனால் ராகுல் தனது ட்விட்டர் பதிவில் விநாயகர் உருவத்தை பிடுங்கி எறிந்துவிட்டு பூ மற்றும் அகல் இருக்குமாறு பதிவேற்றியுள்ளார். இந்துக்கள் மீது அரசியல் காரணங்களுக்காக வெறுப்பு இருக்கும் என நினைத்தால் இந்துக்கள் மீதான காங்கிரஸ் வெறுப்பு வாழ்நாள் வெறுப்பாக தெரிகிறது இந்த செயல்கள் மூலம்.

Tags:    

Similar News