1 லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து 3 நாட்கள் வழிபாடு ! - அண்ணாமலை அதிரடி!

நெல்லையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

Update: 2021-09-06 05:21 GMT

நெல்லையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

விநாயகர் சதுர்த்தி தினத்தில் அனுமதி வழங்காமல் தமிழக அரசு பிடிவாதமாக இருப்பது என்னவென்று தெரியவில்லை.

மேலும், பாஜக தொண்டர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகின்ற 10ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 12ம் தேதி ஆகிய 3 நாட்கள் மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் வீடுகள் முன்பாக வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

இது தனிமனித உரிமை, இதனை தடுக்க யாருக்கும் அனுமதியில்லை. மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை போன்று தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகளுடன் வழிபாடு நடத்த அனுமதி அளிக்க வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது எனவே வழிபாடு நடத்த அரசு அனுமதி அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Maalaimalar

Image Courtesy: Bjp Tamilnadu Twiter

https://www.maalaimalar.com/news/topnews/2021/09/06081408/2984660/Tamil-news-Annamalai-Vinayagar-Chathurthi-1-lakh-Ganesha.vpf

Tags:    

Similar News