வாழைத்தார்களுக்கு மட்டுமே ஸ்டாலின் கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள்: அதிர்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள்.!

வாழைத்தார்களுக்கு மட்டுமே ஸ்டாலின் கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள்: அதிர்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள்.!

Update: 2021-02-05 19:39 GMT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் இடத்தில் சமீப காலமாக வாழைத்தார்களை கட்டி வருகின்றனர். அதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. திமுக எப்போதும் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வரும். குறிப்பாக இந்துக் கலாச்சாரத்திற்கு எப்போதும் எதிராகவே ஸ்டாலின செயல்பட்டு வருகின்றார்.

இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராக இந்துக்கள் ஒன்று திரண்டு இருப்பதால், அக்கட்சியின் தலைமை மிகவும் அப்செட்டில் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை எல்லாம் சரிகட்டவே திமுக நடத்தும் மாநாடு மற்றும் கிராம சபைக்கூட்டத்தில் வாழைத்தார் மற்றும் பூ அலங்காரத்தை பார்க்க முடிகிறது.

இந்நிலையில், ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு வரும் மக்கள் வாழைத்தாருக்காகவே வருவதாக சமீபத்தில் பேசபட்டு வருகிறது. அதற்கு உதாரணம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தருமபுரியில் ஸ்டாலின் பங்கேற்று சென்ற சில நிமிடங்களிலேயே, வந்திருந்த மக்கள் வாழைத்தார்களை கொத்தாக தூக்கிக்கொண்டு செல்லும் காட்சிகளை சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வந்தது.

அதே போன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், திமுக சார்பில் இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் பிரச்சார மேடைக்கு வரும் பாதை முழுவதும் வாழை மரங்கள் மற்றும் கரும்பு தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று சென்ற சில நிமிடங்களிலேயே, கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் வாழை மரத்தில் இருந்த வாழைத்தார்களை போட்டி போட்டுக்கொண்டு எடுத்து சென்றனர்.

இதில் சிலருக்கு சண்டையும் ஏற்பட்டது. கையில் கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். வந்திருந்த சிலர் கூறும்போது, வாழைத்தார் அதிகமாக எடுத்துச்செல்வதை பார்த்தோம் அதனை எடுப்பதற்காகவே நாங்கள் கூட்டத்திற்கு வருகிறோம் என்று கூறினர். இதனை கேள்விப்பட்ட திமுக நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர். வந்திருந்தவர்கள் ஓட்டு போடுவார்களா அல்லது போட மாட்டார்களா என்ற பீதியில் உள்ளதையும் காணமுடிகிறது.
 

Similar News