நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியிலேயே நீடிக்கிறோம்.. பிரேமலதா விஜயகாந்த்.!
நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியிலேயே நீடிக்கிறோம்.. பிரேமலதா விஜயகாந்த்.!
தற்போதுவரை அதிமுக கூட்டணியில் நீடிக்கிறோம் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கூட்டணி பேச்சுவார்த்தையைத் தாமதித்து வருவதால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. தேர்தல் நெருங்கி வருகின்ற காரணத்தினால் உடனடியாக அ.தி.மு.க. தலைமை கூட்டணி குறித்து பேச வேண்டும்.
இந்த நிமிடம் வரை நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம் என்றார். மேலும், சசிகலா விடுதலை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், பெண் என்பதால் எனது ஆதரவு சசிகலாவிற்கு உண்டு. திமுக சொல்லும் பொய் வாக்குறுதிகளை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என கூறினார்.