பால் விலை, பேருந்து கட்டணம் உயரும்? மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அமைச்சர் கே.என்.நேரு!

Update: 2022-03-26 07:09 GMT

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்றார் போல் பால் மற்றும் பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்துவதற்கு வாயப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது; அரசு அதிகாரிகள் சம்பளம் அதிகமாக கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பால், பேருந்து கட்டணம் உள்ளிட்டவைகளில் மாற்றம் இருக்கும். இதே போன்று அதிமுக ஆட்சியிலும் விலை ஏற்றம் இருந்தது. எனவே ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருளாதார ரீதியாக ஏற்றம் வருகின்றபோது மக்கள் அதனை தாங்கிக்கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக அமைச்சர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், முதலமைச்சர் துபாயில் இருந்து தமிழகம் வந்த உடனே விலையேற்றம் பற்றி முடிவு செய்வார் என மக்களுக்கு அமைச்சர் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News