தமிழிசை அக்காவை மீண்டும் வரவேற்கிறோம்.. குஷ்பு ட்வீட்.!

தமிழிசை அக்காவை மீண்டும் வரவேற்கிறோம்.. குஷ்பு ட்வீட்.!

Update: 2021-02-17 10:19 GMT

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அப்பொறுப்பில் இருந்து குடியரசுத்தலைவர் விடுவித்து அறிவிப்பு வெளியிட்டார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கும் கிரண்பேடிக்கும் இடையே மோதல் போக்கு வலுத்து வந்தது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என இரண்டு பேரும் ஒருவிதமான மோதலை கடைப்பிடித்து வந்தனர்.

இந்நிலையில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக புதுச்சேரி மாநிலத்தையும் கவனிப்பார் என குடியரசுத் தலைவர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்திற்கு துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்கும் தமிழிசை சவுந்தரராஜனை பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு வரவேற்று ட்வீட் பதிவிட்டுள்ளார். ‘’அக்காவை மீண்டும் வரவேற்கிறோம்’’என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Similar News