ஆளுங்கட்சிக்கு ஆதரவு: மேற்குவங்க டி.ஜி.பி. மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு.!
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதே நேரத்தில் ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்பட்ட மேற்கு வங்க மாநில டிஜிபி வீரேந்திராவை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றியுள்ளது. அவருக்கு பதிலாக மேற்கு வங்க மாநிலத்திற்கு புதிய டிஜிபியாக நீரஜ்நயன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
டிஜிபி மாற்றம் செய்யப்பட்டதற்கு அம்மாநில பாஜகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஜனநாயக ரீதியில் பாஜக தொண்டர்கள் வாக்கு சேகரிக்க செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.