3 ஆண்டுகளில் தமிழக எம்.பி என்ன செய்தார்கள் - சொடக்கு போட்டு கேள்வி எழுப்பும் கிருஷ்ணசாமி

தி.மு.க ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை' என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-27 09:07 GMT

தி.மு.க ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை' என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அப்பொழுது அவர் கூறியதாவது, 'தி.மு.க ஆட்சிக்கு வந்ததால் மின்கட்டணம் அதிகரித்துள்ளது மத்திய அரசை மட்டுமே தி.மு.க அரசு குற்றம் சாட்டுகிறது.


'சீன பட்டாசுகள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்து பட்டாசு தொழில்களை பாதுகாக்க வேண்டும். தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் கவனம் செலுத்தி வேளாண் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.


மன அழுத்தங்களில் இருந்து மாணவர்களை காப்பாற்றி தற்கொலைகளை தடுக்க வேண்டும். கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும். தென் தமிழகத்தில் வளர்ச்சிக்காக புதிய தமிழகம் குரல் கொடுத்து வருகிறது ஆனால் மூன்றாண்டுகளில் எம்.பி'க்கள் என்ன செய்தார்கள் என தெரியவில்லை லோக்சபாவில் குரல் கொடுக்கவில்லை' என்றார்.


Source - Dinamalar

Similar News