அண்ணாமலை என்ன செய்கிறார், என்ன சாப்பிடுகிறார்'ன்னு உளவுத்துறை வச்சு பாருங்க! கலவரம் பண்றவங்களை உட்ருங்க - தி.மு.க அரசை விமர்சித்த அண்ணாமலை
போலீசார் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையில் உள்ளனர் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையில் உள்ளனர் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பா.ஜ.க தலைவர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, டி.ஜி.பி அறிவிப்பை வரவேற்கிறேன் சொல்வதோடு நிறுத்தாமல் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். தமிழக அரசன் நடவடிக்கை மீது நம்பிக்கை உள்ளது.
பாஜக தொண்டர்கள் அமைதியாக இருக்க வேண்டும், குற்றவாளிகள் விரைவில் கைது செயல்படுவார்கள் என நம்புகிறோம் என்றார். தமிழக போலீஸ் கைகள் கட்டப்பட்டுள்ளன அதனால் அவர்களால் சுதந்திரமா செயல்பட முடியவில்லை. எனவே பல முறை கூறி வருகிறோம் அதன் உச்சம்தான் தற்பொழுது நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பா.ஜ.க தொண்டர்களுக்கு உதவுவோம் தாக்குதல் நடத்துவதால் பா.ஜ.க'வின் வளர்ச்சியை தவிர்க்க முடியாது இதே சூழ்நிலை தொடர்ந்தால் பா.ஜ.க தொண்டர்களின் கோபத்திற்கு மாநில அரசு ஆளாகும் என எச்சரித்துக் கொள்கிறேன் என்றார்.
மேலும் பேசிய அவர் கூறியதாவது பா.ஜ.க'வினரை உளவுத்துறையினர் உன்னிப்பாக கவனிக்கின்றனர், அண்ணாமலை என்ன செய்கிறார், என்ன சாப்பிடுகிறார் என கண்காணிப்பவர்கள் கலவரம் செய்பவர்களை கண்காணிப்பதில்லை எனவும் விமர்சித்தார்.