ஆதிதிராவிடர் நலனுக்கான நிதி 4,099 கோடி ரூபாய் நிதி எங்கே? - தி.மு.க அரசிடம் கேள்வி எழுப்பும் அண்ணாமலை

ஆதிதிராவிடர் நலனுக்காக 4,099 கோடி ரூபாய் ஒதுக்கியும் 20 திட்டங்களை தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2022-12-27 12:51 GMT

ஆதிதிராவிடர் நலனுக்காக 4,099 கோடி ரூபாய் ஒதுக்கியும் 20 திட்டங்களை தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

ஆதிதிராவிடர் நலன் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆதிதிராவிட நலத்துறை ஊழியர்களுக்கு 757 கோடி நிதி ஊதியமாக அரசு செலவிட்ட நிலையில் விடுதிக்கு ஏதும் செலவிடாதது ஏன்? என தி.மு.க அரசிடம் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆதிதிராவிடர் விடுதியில் மாணவர்கள் சரியாக குடிநீர் கிடைக்காமல் அவதிக்கு உள்ளதாகவும் அவர்கள் சாப்பிடும் உணவில் புழுக்கள் உள்ளதாகவும் அண்ணாமலை தனது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார்.



Source - Annamalai Tweet 

Similar News